புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2015

சிறிசேன அமைச்சரவையில் பதவியேற்கமாட்டோம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் தகவல்!




இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காது என்று அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக மைத்ரி பால சிறிசேன வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மைத்ரி பால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று (ஞாயிறு) பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிசேன அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு இடம் முதல் 4 இடம் வரை ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரவையில் பதவியேற்க மாட்டோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் சுமந்திரன் கூறுகையில், தமிழர்களின் கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன நிறைவேற்ற வேண்டும் என்றார்.

ad

ad