புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ரகசிய திருமணம்! இளையராஜா கலந்துகொள்ளவில்லை!


இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்தநிலையில் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார். இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட திருமணம் திடீரென்று மாற்றப்பட்டு கீழக்கரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒருவாரத்துக்கு முன்பே கீழக்கரைக்கு வந்து தங்கியிருந்தனர்.

யுவன்சங்கர்ராஜாவுக்கும், ஜபருன்னிசாவுக்கும் 01.01.2015 வியாழக்கிழமை மாலை கீழக்கரை அருகே உள்ள செங்கல்நீரோடை கிராமத்தில் அமீர்பைசல்கார்டன் பகுதியில் ரகசியமாக திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ad

ad