புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

இன்று மட்டும் நீதியரசர் சிராணி ; நாளை கே. ஸ்ரீபவன்?

news
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து  நீதியரசாக  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் நாளை  பிரதம நீதியரசராக பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார், இருப்பினும் இதுவரை காலமும் பிரதம நீதியரசராக பதவியில் இருந்த மொஹான் பிரீஸ் பதவி விலகாத நிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையால் நாட்டில் தற்போதோ இரண்டு பிரதம நீதியரசர்கள் கடமையில் உள்ளனர்.

இதேவேளை சிராணி பண்டாரநாயக்க நாளை பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரின்  பதவிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 0

ad

ad