புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2015

சரத் பொன்சேகாவுக்கு எம்.பி. பதவியை விட்டு கொடுக்கும் ஜெயந்த கெட்டகொட


ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்தாக கெட்டகொட குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பொன்சேகாவுக்கு வழங்குவது குறித்து தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்திய பின்னர் பதவியை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு சரத் பொன்சேகா தெரிவு செய்யப்பட்டதுடன் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதை அடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இதனையடுத்து ஜயந்த கெட்டகொட அந்த இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad