புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக்
கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர். நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை.
எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் அபுதாபி நாட்டில் அன்று வாடகை காரை ஓட்டிய ஒருவருக்கு இன்று நான்கு விமானங்கள் இருக்கின்றன. இந்த மோசடிகளை செய்தவர் என்றாவது அதன் பிரதிபலனை அனுபவிப்பார். அவர் என்றாவது நரகத்தில் வாடகை காரை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டிருந்தாராம்.

ad

ad