புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப்புக்கு முரணானது: முன்னாள் கணக்காய்வாளர்


நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது பெயரில் வங்கி கணக்கொன்றில் அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தை அதில் வைப்புச் செய்திருந்தால், அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணான செயல் என முன்னாள் அரச கணக்காய்வாளர் எஸ்.சீ. மாயதுன்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வைத்திருந்த வங்கி கணக்கு சட்டவிரோமானது எனவும் அது அரச பொது நிதியத்திற்கு சேர வேண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வங்கி கணக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் தொடங்கப்பட்ட முன்னெடுக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 8 பில்லியன் பணத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அரச பொது நிதிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 149 (1) இன் அடிப்படையில் நிதியமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad