புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

காங்கேசன்துறைவரை ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கிறார் மகிந்த


எதிர்வரும் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை பலாலி விமான நிலையத்தை வந்தடையும் ஜனாதிபதி மகிந்த அங்கிருந்து காங்கேசன்துறைக்கு செல்வார்.

காங்கேசன்துறை ரயில் நிலையத்தைத் திறந்து வைத்து அங்கிருந்து ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலாவது பயணியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரை வந்தடைவார்.

இதேவேளை இன்று தொடக்கம் கொழும்பிலிருந்து சகல ரயில் சேவைகளும் காங்கேசன்துறை வரை நடைபெறும் என புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி துரையப்பா பொது விளையாட்டரங்கில் இடம்பெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார்.

பின்னர் மன்னார், வவுனியாவில் நடக்கும் பரப்புரைக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிற

ad

ad