புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

தம்புளையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்த மக்கள்


பாடசாலை மாணவிக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 
தம்புள்ளை 40 மைல் கல் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபரான ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்கள் நடமாடும் இடங்களில் இந்த செயலை செய்து வந்துள்ளதாக சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தெரிவிப்பதாக பொலிஸார் கூறினர்.
குறித்த ஆசிரியரின் செல்போனை பரீட்சித்து பார்த்த போது அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகளும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களும் இருந்தன எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

ad

ad