புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

அகதிகள் முகாமில் தாக்குதல் ; நால்வர் கைது


news
தமிழகம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது  மனைவி ஜீவா ரெஞ்சினி (33) ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்தநிலையில் தடுக்க முயன்ற உதயகுமாரின் தம்பி ரவிச்சந்திரனையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்  காயமடைந்த ஜீவா ரெஞ்சினி, ரவிச்சந்திரன், உதயகுமார் ஆகிய 3 பேரும் ஆசாரிப்பள்ளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து காயமடைந்த ஜீவா ரெஞ்சினி அகதி முகாமை சேர்ந்த ஜேசுராஜன்(24), உசேன், சர்ஜான், ஸ்டீபன், பார்த்திபன், சத்தியராஜன்(24), மணிவண்ணன்(23), செல்வராஜ், வெஸ்லி(25) ஆகிய 9 பேர் மீது கன்னியாகுமரி பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்திருந்தார்.

இதனையடுத்து ஜேசுராஜன், சத்தியராஜன், மணிவண்ணன், வெஸ்லி ஆகிய 4 பேரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ad

ad