புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவில்லை


தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாம் இரகசியமான ஒப்பந்தங்கள் எதனையும் கைச்சாத்திடவில்லை. இரகசியமான நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் எமக்கு இருக்கவில்லை.
தேர்தல் பிரச்சார காலத்தில் அரச அதிகாரம் மிக மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டது.
எனினும் மக்களின் சக்தியின் ஊடாக இந்த அதிகார துஸ்பிரயோகத்தை தோற்கடிக்க முடிந்தது.
நாட்டுக்கு நல்லது செய்யக் கூடிய வகையிலான மாற்றமொன்று தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது. ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதற்காக எங்களது முழு அளவிலான ஒத்துழைப்பு வழங்கப்படும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad