புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

அலரி மாளிகை முற்றுகை என்ற தகவலால்தான் அங்கு சென்றேன் சதிப் புரட்சியில் ஈடுபடவில்லை என்கிறார் கோத்தா

 

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிடவுள்ள தாக கிடைத்த தகவலை அடுத்தே, ஜனாதிபதி தேர்தல் தினமன்று இரவு தான் அங்கு  சென்றதாக முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றதைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலை அலரி மாளிகை 
யில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளி யிட்டுள்ள போதே அவர் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகை யில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அலரி மாளி கையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்தே அதிகாலை யில் அலரி மாளிகைக்குச் சென்றேன்.

இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றால், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப் பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தாம் உடன டியாக அலரி மாளிகைக்கு வருவதாக அவர் கூறினார். 

அவர் அங்கு வந்து  முன்னாள் ஜனாதிபதியுடன்  கலந்துரையாடினார், அதையடுத்து அலரி மாளிகையை விட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனை யவர்களின் பாதுகாப்புக்கு ரணில் விக்கிரம சிங்க உத்தரவாதம் அளித்தார். 

இது தான் தேர் தல் இறுதி முடிவு வெளியாவதற்கு முன்னர் நடந்தது. நாம் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டிருந்தால் எதற்காக, சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்? அவர் அரசாங்கத்துக்கு சட்ட ஆலோ சனைகளை வழங்குபவர் என்று கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad