புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

அந்த ஓட்டலுக்கு சென்றது உண்மைதான்; ஆனால் நான் மது குடித்து கலாட்டா செய்யவில்லை : அஞ்சலி விளக்கம்



நடிகை அஞ்சலி, சித்தியுடனான பிரச்சனைக்கு பின்னர் சென்னையை காலி செய்து விட்டு  ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலேயே தங்கியிருக்கிறார்.

சமீபத்தில் அவர், ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அளவுக்கு மீறி குடித்துவிட்டு, போதையில் கலாட்டா செய்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.  பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அவர் நள்ளிரவில் சென்றதாகவும், அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்த நிலையில், அவர் மீது ஒரு இளைஞர் மோதியதாகவும் கூறப்படுகிறது. போதையில் இருந்த அஞ்சலி அந்த இளைஞரை மோசமான வார்த்தைகளால் திட்டி கலாட்டா செய்ததாக பேசப்படுகிறது.

ஓட்டல் நிர்வாகிகள் அஞ்சலியை சமாதானப்படுத்த முயன்றார்கள். முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஓட்டல் நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசார் வருவதற்குள், அஞ்சலி அங்கிருந்து போய் விட்டார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அஞ்சலி, ’’என்னுடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்துக்காக இரவு 9 மணிக்கு அந்த ஓட்டலுக்கு சென்றது, உண்மைதான். ஆனால், நான் அந்த ஓட்டலில் 30 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். நான், மது குடிக்கவில்லை. 

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதேபோல், ஆண் சினேகிதர்களுடன் ஊர் சுற்றவும் மாட்டேன். 30 நிமிடங்களுக்கு மேல் நான் அங்கு இல்லை. அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.ஆனால், நான் குடித்துவிட்டு ஒருவருடன் தகராறு செய்ததாக வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். இது, எனக்கு வேண்டாதவர்கள் பரப்பி விட்ட வதந்தி. அந்த ஓட்டலின் சி.சி.டி.வி. கேமராவை சோதித்தால், நான் சொல்வது உண்மை என்று தெரிந்து விடும்’’என்று விளக்கம் அளித்துள்ளார்.

ad

ad