புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

ஜப்பான் பிணைக்கைதி தலை துண்டித்து கொலை: மற்றொரு பிணைக்கைதியை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிபந்தனை

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரது தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட காட்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 1,200 கோடி ரூபாய் கேட்டு தாங்கள் விதித்த கெடு முடிவடைந்ததால், இந்த செயலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு கூறியிருக்கின்றது. 

ஜப்பானியரின் தலை துண்டிக்கப்பட்ட காட்சிகளை புகைப்படமாக வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, ஜோர்டானில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணை விடுவித்தால், மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்றொரு ஜப்பானிய பிணைக்கைதி விடுவிக்கப்படுவார் என்றும் புதிய நிபந்தனையை விதித்திருக்கின்றது.

ad

ad