புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்

மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இங்குள்ள இளைஞர்களை அடித்து துன்புறுத்தி வற்புறுத்தி சேர்த்துக்கொண்டு யுத்தம் செய்வதற்கு தூண்டியவர்கள் கருணா,பிள்ளையான் போன்றவர்களே.
அவர்கள் குறித்த இளைஞர்களை கொன்றுகுவித்துவிட்டு எஞ்சியிருந்த இளைஞர்களை சிறைகளில் அடைத்துவிட்டு இவர்கள் இரஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரும் 8ம் திகதிக்கு பின்னர் மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் ஆகிய இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென நான் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.
karuna_pillaiyan
Karunameeting1

ad

ad