புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்


ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று காலை 11 மணி 35 நிமிடம் அளவில் ஸ்ரீலங்கன் விமானம் யூஎல்-846 மூலம் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். எனினும் அவர் எங்கே புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவர் தனது குடும்பத்தினருடன் விசாலமான பயணப் பொதிகளை எடுத்துச் சென்றதாகவும், விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வாயில் ஊடாக இவர்கள் விமானத்திற்குள் பிரவேசித்ததாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவது உறுதி என்று உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ராஜபக்ஷவினர் ஒவ்வொருவராக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad