புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

ஜெ., மனு விசாரணையில் சுப்ரமணிய சாமி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு



ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்த தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்று துவங்கியது.

அதில்,  மேல்முறையீட்டு வழக்கில், தன்னையும் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ளுமாறு பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராகி வாதத்தை முன் வைத்தார்.

தாம் புகார் தாரர் என்பதால் தன்னை வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜெயலலிதா ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதால் தன்னை வழக்கில் சேர்ப்பது அவசியம் என்றும் சுப்ரமணிய சுவாமி வாதாடினார்.

ஆனால், இதனை ஏற்க நீதிபதி குமாரசாமி மறுத்துவிட்டார். ஜாமீன் மனுவை மட்டுமே காரணம் காட்டி வழக்கில் உங்களை வழக்கில் சேர்த்தக் கொள்ள முடியாது என்று கூறினார். வேண்டுமானால் சுப்ரமணிய சுவாமி அரசு தரப்புக்கு உதவியாக இருக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

வழக்கில் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரமணியசுவாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

ad

ad