புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்! இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வென்சென் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.
துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொலிஸார் அந்தக் கடையை சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் அவர்களின் வகுப்புகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகின்ற ஆயததாரி, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் நேற்று வியாழன்று அதிகாலை பொலிஸ் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
முன்னதாக, இந்த ஆயுததாரி, ஷார்லி எப்தோ சஞ்சிகை மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற குவாஷி சகோதரர்களுடன் தொடர்புடையவர் என்று பிரான்ஸ் ஊடக வட்டாரங்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இதுவாகும்.

ad

ad