புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

இலங்கை - நியூஸிலாந்து போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
தொடரின் மூன்றாவது போட்டி இன்று ஆக்லேண்டில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 28.5 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், கடும் மழை தொடர்ந்து பெய்தமையால் போட்டி முடிவின்றி முடிடைந்துள்ளது.
முன்னதாக மழை காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் போட்டி கைவிடப்பட்ட வேளை, நியூசிலாந்து சார்பாக அதிரடியாக விளையாடிய மார்டின் கப்டில் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இரு அணிகளும் மோதும் நான்காவது போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது

ad

ad