புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு பெறுப்பானவர் நாட்டை விட்டு வெளியேற தடை


ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான தடை உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே  , குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு எழுத்துமூல உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளார்.
 
வாகனங்கள் காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த போக்குவரத்து பணிப்பாளரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தியிருந்தது.
 
இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad