புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

உளவு பார்த்தோரின் உயிர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பறிப்பு


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக் கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவில் இணைந்து மதம் மாறி, தீவிரவாதிகளின் முகாம்களிலே, சுமார் 8 பொலிஸ் அதிகாரிகள் தங்கியுள்ளனர்.

இவர்கள் தீவிரவாதிகளை உளவு பார்த்து அந்த தகவல்களை ஈராக் அரசாங்கத்திற்கு தெரிவித்து வந் துள்ளனர்.

இவ்விடயத்தை அறிந்த ஐ.எஸ். ஐ.எஸ், தங்களை உளவுபார்க்க வந்த 8 உளவாளிகளையும் கொல்ல திட்டமிட்டனர்.

இதனையடுத்து அந்த 8 பேரை யும் பிணைக்கைதிகளை போல் நடத்தி, காவி நிற உடை அணி வித்து மரண தண்டனையை நிறை வேற்றுவதற்காக மொசூல் (Mosul) நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை மண்டியிட செய்து, நேர்காணல் நடத்தி சில தகவல்களை பெற்றுள்ளதாக கூறப் படுகிறது.

இதன்பின் அவர்கள் அனைவ ரின் பின்னாலும் நின்றிருந்த ஒவ் வொரு தீவிரவாதியும், துப்பாக் கியை ஏந்தியபடி போஸ் கொடுத்து வெகு விரைவாக உளவாளிகளை சுட்டு கொன்றுள்ளனர்.

மேலும் தாங்கள் சுட்டுக் கொன்ற புகைப்படங்களை இணையத்தளத் தில் வெளியிட்டுள்ளனர்.  

ad

ad