புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2015

வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு 27கைதிகள் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பு: பொன்சேகா


வெலிக்கடை சிறையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கைதிகள் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  சிறையில் ஏற்படும் பிரச்சினைகள் சிறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் தீர்க்கப்படவேண்டும்

சிறையில் சில திருத்த முடியாத கைதிகள் இருந்தாலும் பெரும்பாலான கைதிகள் ஒழுக்கமானவர்கள் என்பதுடன் அதிகாரிகளும் சிறந்த முறையில் பணியாற்றக் கூடியவர்கள்.
அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் சிறைக்கு அழைக்கப்பட்டதால், பிரச்சினை பெரிதானது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தனது விசுவாசமான அதிகாரிகளை பயன்படுத்தியதுடன் சில, கைதிகளை குறி வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கலவரம் ஏற்பட்டதுடன் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து பல குழுக்கள் விசாரணைகளை நடத்திய போதிலும் விசாரணை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதிய அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன் விசாரணை அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

ad

ad