புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

யாழில் கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்.
மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது      'குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே!, 'காணாமலாக்கலையும்,கடத்தல்களையும்  வெளிப்படுத்து!' மற்றும் 'சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!' ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad