புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யுமாறு வூட்டன் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கொட்டகலை வூட்டன் தோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யும் ஒருவரை
கைது செய்யுமாறு கோரி குறித்த தோட்டத்தின் தொழிலாளிகள் உட்பட தோட்ட அதிகாரிகளும் இன்று  காலை 9 மணியளவில் தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்திரின் உதவியோடு பல காலங்களாக போதைபொருள் விற்பனை செய்து வருவதாகவும் போதை பொருள் விற்பனை செய்வதினால் தமது பிள்ளைகள் உட்பட சமூகமும் சீர்குழைந்து செல்வதாகவும் தோட்ட அதிகாரியின் அனுமதி இல்லாமல் குறித்த நபர் தன்னுடைய வீட்டை அபிவிருத்தி செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதன் பின் ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சோதனைபடுத்தும் போது கஞ்சா போதை பக்கட்கள் கைப்பற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டன.  இச்சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்… கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பல காலங்களாக போதை பொருள் விற்பனை செய்து வந்ததாகவும் அதற்கு அவர் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ad

ad