புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தெறியப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி  வைத்துள்ளனர். 
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyC.html#sthash.NO8viocQ.dpuf

ad

ad