கீரிமலை கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலையொன்று வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 9மணிக்கு குறித்த ஆயுள்வேத கட்ட திறப்பு விழா இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.