புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

அகதிகளைத் திருப்புவது உசிதமானதல்ல ஜனாதிபதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப் புவது பொருத்தமானதல்ல என்று
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அகதிகளை திரும்ப அழைப்பதற்கு  இலங்கை அரசாங்கம் தயங் குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடி யேற்றப்படாமல் இருப்பதும், மீள் குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒரு பிரச்சினையாக இருப்பதும் முதல் காரணமாக சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக, மூன்று பத் தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்துவிட்ட இலங்கைத் தமிழர் களை அங்கிருந்து திருப்பி அழைப் பது மனிதத்தன்மையற்ற செயல் என்று இலங்கை அரசாங்கம் உணர்கிறது.

அவர்கள் உள்நாட்டில் உறவு களை ஏற்படுத்தியுள்ளனர், தொழில் செய்கின்றனர். பலர் கல்வியைப் பெற்று வருகின்றனர். இதனால், அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தை மனிதாபி மான விவகாரமாக பார்ப்பதாகவும், கட்டாயமாக திருப்பி அனுப்புதலின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதிக்கும், இந்தி யப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுக்களில், அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் விவகாரம் மற்றும் நீண்டகாலமாக இழுபடும் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் விவகாரம் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.    

ad

ad