புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை ; பான் கீ மூ

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் புதிய அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இலங்கையின் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர எடுக்கும் நடவடிக்கையை வரவேற்றுள்ள ஐ.நா பொதுச் செயலாளர்,
 
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென பான் கீ மூனின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

ad

ad