புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்; பிரபல நடிகையின் வருங்கால கணவர் சென்னை போலீசில் புகார்




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கக் கூடாது என்று மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை திரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்ற வருண்மணியன், அங்கு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த சில நாட்களாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த தகவலை உண்மை என்று நம்பி தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் சிலர், சென்னை அணியை வாங்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள வருண்மணியன், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் சீனிவாசனுக்கு நெருக்கமானவர் என்றும், ஆகையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன், வருண் மணியனுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை வருண்மணியன் மறுத்துள்ளார்.

நடிகை திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும்  கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ad

ad