புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2015

லண்டன் விபத்தில் தமிழ் பெண் மரணம்


லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்துள்ளார்.
ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
மேற்கு ஹெம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடந்து செல்லும் போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதிய கார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது.
விபத்து காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு தாய் நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை உச்சக்கட்டத்தில் இருந்த போது லண்டனுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அவரது கணவரான 44 வயதான சோதிலிங்கம் செல்லத்துரை தமது பிள்ளைகளின் கல்வி பூர்த்தியாகும் வரை அவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்தார்.
இதனையடுத்து செல்லத்துரை தனது 18 வயது மகளான ஹம்சனாவுடன் கடந்த ஒக்டோபர் மாதம் லண்டன் சென்றுள்ளார். இவர்களின் 22 வயது மகன் வசந்த் இலங்கையில் தங்கியிருப்பதுடன் அவர் கணனி அறிவியல் படிப்பை நிறைவு செய்து வருகிறார்.

ad

ad