புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!



news
பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேச சபை தலைவர் தியாகரட்ன அல்விஸ் மீது பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டது. 
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தொடர்பு இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மொஹான் பீரிஸ் தொடர்பான விசேட விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இரவு 8 மணிவரை இவ்விவாதம் இடம்பெறும். 
இதனை முன்னிட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளனர்.

ad

ad