புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து



டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 10.15 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் தகுதியை ஆம் ஆத்மி கட்சி பெற்றது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வெற்றியை தொடர்ந்து அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார். 

ad

ad