ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவைக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தனவை பேரவையின் ஆசிய பசுபிக் வலய அதிகாரி ஜொஸ்பா ஒஜானோ தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அகதிகள் மற்றும் இலங்கையின் அடைக்கலம் கோரியுள்ளோர் தொடர்பில் புரிந்துணர்வுடன் விடயங்கள் ஆராயப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.