புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2015

கல்வி ராஜாங்க அமைச்சர் யாழ். வருகை


கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று யாழ்ப்பாணம் வட்டு இந்து கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.  

வட்டுகோட்டை இந்து கல்லூரியின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கல்வி ராஜாங்க அமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் வருகைதந்திருந்தனர்.

புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்று 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் பாடசாலைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஆசிரியர்கள், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை முன்னைய மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சியில் இருந்த போது வடக்கு, கிழக்கில் இடம்பெறும் போது நிகழ்வுகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில் அச்சமான ஒரு சூழ்நிலை காணப்பட்டுவந்தது.

அனால் இன்று புதிய அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விருந்தினராக அழைக்கப்படுவதுடன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றமை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







ad

ad