புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

'பார்சிலோனா' 'மான்செஸ்டர் சிட்டிய' வென்றது

ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து
போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 'பார்சிலோனா' மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 'மான்செஸ்டர் சிட்டி' அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இங்கிலாந்தின் எதிஹாட் ஸ்டேடித்தில் நடைபெற்றது. 

அதில், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரேசிலின் நெய்மர், உருகுவே வீரர் சுவாரஸ் போன்ற துடிப்பான இளம் வீரர்களைக் கொண்டுள்ள பார்சிலோனா அணி மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இரு அணிகளும் சமபலத்துடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியும், இரண்டாவது பாதியும் வெவ்வேறாக இருந்தன. ஆட்டம் முடிய 21 நிமிடங்களே இருந்த நிலையில், மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியா ஆகுவேரோவுக்கு லைப்லைன் கொடுக்கப்பட்டது. பார்சிலோனா அணியின் வெற்றிக்கு மேலும் வலுசேர்த்தது. இறுதியில் சுவாரஸின் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றி பெற்றது. 

ad

ad