புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2015

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற நியமனம் தொடர்பில் ‘ரிட்’ உத்தரவொன்றை வழங்குமாறு கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஊவா ஆளுநர் என்.ஜீ.ஜயதிஸ்ஸ, ஊவா முன்னாள் ஆளுநர் நந்த மெதீவ், ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சட்டமா அதிபர் உட்பட 34 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. 17 ஆசனங்களை கைப்பற்றியது. கூடுதல் ஆசனங்களை பெற்ற கட்சியின் சார்பில் மனுதாரர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஆளுநருக்கு வழங்கிய சத்தியக் கடதாசியின் பிரகாரம் ஹரீன் பெர்ணாந்து முதலமைச்சராக நியமிக்ப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே  பெரும்பான்மை பாலமிருக்கிறது. ஹரீன் பெர்னாந்துவை முதலமைச்சராக நியமித்தது சட்ட விரோதமாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad