புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது


ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் தன்வசம் வைத்திருந்த 22 கடவுச்சீட்டுக்கள் 8 தேசிய அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad