புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

ஆஸ்திரேலியர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள் என நம்புகிறேன்: ரோகித் சர்மா


உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் அசுர பலத்துடன் காணப்படும் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணியே  இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இந்தியா- ஆஸ்திரேலிய இடையேயான இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அதேபோல்,இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா  இது பற்றி கூறியதாவது: - “ இது (ஸ்லெட்ஜிங்) விளையாட்டின் ஒரு அங்கம் தான். எனினும் அவர்கள் எல்லையை தாண்டமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். 

மிகப்பெரும் போட்டிகளில் எப்படி விளையாடவேண்டும் என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். சாம்பியன் டிராபி மற்றும் 2011 உலக கோப்பைகளில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். இதுபோன்ற பெரிய போட்டிகளில் எல்லாம் நாங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எனவே நாங்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளோம். இது ஒரு அற்புதமான ஆட்டமாக அமையும் என்ற நம்புகிறோம்’ என்றார். 

ad

ad