புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

தாயார் கிளிநொச்சிக்கு வந்தாலே விபூசிகா விடுவிக்கப்படுவார்; எனது ஆவணங்களை தாருங்கள் ஜெயக்குமாரி கோரிக்கை


பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தான் கைது செய்யப்பட்ட போது எடுத்துக்கொண்ட அடையாள அட்டை உள்ளிட்ட
ஆவணங்களை தன்னிடம்  ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்றத்திடம்  இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அதற்கமைய விசாரணைக்கு குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன்  மாகாதேவா ஆச்சிரமத்தில் உள்ள ஜெயக்குமாரியின்  மகள்  விபூசிகாவை தாயுடன் சேர்ப்பது தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
எனினும்  ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகை தந்தபின்னரே நீதிமன்றின் ஊடாக விபூசிகா விடுதலை செய்யப்படுவார் என்று கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
மேலும் பொலிஸாரால் எடுக்கப்பட்ட ஆவணங்களை மீள கையளித்த பின்னர் தான் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து கிளிநொச்சிக்கு வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad