நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக
உறுதியளித்துள்ளனர் என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் க்ரேட் லொஷேன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு வடக்கு முதல்வர் உள்ளிட்ட பலரைச் சந்தித்து கலந்து பேச்சுக்களை நடாத்தியிருந்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்குபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.