புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

மூவின மக்களுக்கும் சமமாக சேவைகள் பகிர்ந்தளிக்கப்படும்! கிழக்கு மாகாண முதலமைச்சர்


கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது அம்மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினர்.
இதனை கவனத்தில் எடுத்த முதலமைச்சர் இக் கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து எதிர்கால வாழ்வினை வளம் பெறச் செய்வதே எனது நோக்கமும் சேவையுமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
எவருக்கும் பாரபட்சமின்றி சமமாக சகல சேவைகளும் பகிர்ந்தளிக்கப்படுமென இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உறுதியாக தெரிவித்தார்.

ad

ad