புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2015

ஆயரின் கேள்விக்கு பதிலளிக்காத ரணில்

 யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு
ஏன் இவ்வளவு பாதுகாப்பு என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
இன்று மாலை 6 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில்  யாழ்.ஆயர் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஆயர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
மேலும் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணிலுக்கு இன்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் விசேட அதிரடிப் படைகள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையிலேயே யாழ்.ஆயர் பிரதமரிடம் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
 
அதற்கு பிரதமர் ரணில் பதில் எதுவும் கூறாது ஆயரிடம் இருந்து விடைபெற்றார்

ad

ad