பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சின் தரப்பு வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்றக்குழு மற்றும் நேஸ்பி பிரபுவின் தலைமையில் லண்டனில் இயங்கும் இலங்கை தொடர்பான நாடாளுமன்றக்குழு என்பவற்றையும் சந்திக்கவுள்ளார்.
முன்னர் மஹிந்த ராஜபக்ச லண்டன் சென்றபோதெல்லாம் தமிழ் புலம்பெயர்வாளர்களை சந்திக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.