யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 ஆவது' பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை 87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.