புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

வங்கதேச அணியை நாங்கள் எளிதாக நினைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா

உலக கோப்பை தொடரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை சந்திக்கிறது. 

இந்த நிலையில் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:- வங்கதேச அணியை நாங்கள் எளிதாக நினைக்கவில்லை. காலிறுதிப் போட்டி, நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும். ஒரு தவறு செய்தால் கூட போதும் தோல்வி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அனைத்து துறைகளிலும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகும். இங்கிருந்து தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு பந்தையும் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதி போட்டியில் ஆட உற்சாகமாக உள்ளேன். 

எங்களுக்கு எதிராக வங்கதேசம் நன்றாக ஆடியுள்ளது. 2007 உலகக்கோப்பையிலும் ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

ad

ad