புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

சுதந்திரத்துக்கான பங்களிப்பில் தமிழர்கள்; இராஜாங்க அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவிப்பு


 இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடி யவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.
அவர் களில் தமிழ் சகோதரர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று கலாசார இராஜாங்க அமைச்சர் நந்தி மித்திர ஏக்கநாயக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செய லாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற் றும் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக் கையில் - இலங்கைத் தாய்க்கு மூன்று பிள் ளைகள். அவர்களில் முதல் பிள் ளையாக சிங்களவர்களும் இரண் டாவது பிள்ளையாக தமிழர்களும் மூன்றாவது பிள்ளையாக முஸ் லிம்களும் அன்பாக வாழ்கின்றனர்.
 
தாயானவள் ஒரு பிள்ளைக்கு ஒரு மாதிரியும் மற்றைய பிள்ளைக்கு வேறு மாதிரியும் பாசம் காட்டுவ தில்லை.
இந்நாட்டின் சுதந்திரத்துக்காக சிங் கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலை வர்கள் பாடுபட்டுள்ளார்கள். அவர் கள் பெற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேன நாயக்க ஆவார். அவரின் காலத்தில் தான் அனைவரும் சமத்துவமாக நடத்தப்பட்டனர். அந்தக் காலம் ஒரு பொன்னான காலமாகும்.
 
பின்னர் நாட்டில் இன முரண்பாடு கள் தோற்றம் பெற்று போர் உரு வானது. இந்தப்போரில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு இன முரண்பாடு களை மறந்து இலங்கையில் அனைத்துப் பகுதிகளையும் அபி விருத்தி செய்ய வேண்டியுள்ளது.
 
அவ்வகையில் தற்போது அபி விருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறிப் பிட்டதொரு இனத்துக்கு மட்டுமன்றி அனைத்து பிரதேசங்களுக்கும் வேறுபாடு இன்றி முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தா

ad

ad