புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!


திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி
அண்மையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐ விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்குள் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிற்பகலில் நுழைந்தனர்.

அப்போது, முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. முதல்வரின் வீட்டிற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை, காவல்துறையினர் வெளியேற்றினர்.

முதல்வர் வீட்டிற்குள் ஆம் ஆத்மி கட்சியினர் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ad

ad