புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இந்தக் குழு எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு முதன் முதலில் கூடி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவது குறித்து ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது தொடர்பாக ஆராய்ந்து அரசியல் கைதிகளை எந்த அடிப்படையில் துரிதமாக விடு விக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு சிறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவினராக நாம் பார்க்கின்றோம். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருபவர்கள் மற்றைய குழுவினர் எதுவித வழக்கும் தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
இவர்களை எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது குறித்து இக்குழு ஆராயும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் கைதிகள் பலவந்தமாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
புனர்வாழ்வு என்பது கைதிகளின் விருப்பத்துக்கு மாறாகத்தான் செய்யப்படுகிறது. ஆனால் புனர்வாழ்வு என அனுப்பப்படுகின்ற போது, ஆறு மாதங்களுக்குப் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் ஆறு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் எமக்கு உள்ளது.
புனர்வாழ்வுக்கு அனுப்பப்படாமல் இருந்தால் இரண்டு மூன்று வருடங்கள் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான நிலைமையும் காணப்படுகிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் மூலமே 900ற்கும் அதிகமாக இருந்த அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை 300 ஆகக் குறைக்க முடிந்துள்ளது.
புனர்வாழ்வுக்கு அனுப்பும் விடயத்தை சட்டப்படியாக ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தாலும், குறிப்பிட்ட காலத்துக்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் அந்தக் காலத்தின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் உள்ளது என்றும் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. எந்தெந்த சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்ற முழு விபரங்களும் எம்மிடம் உள்ளன.
பயங்கரவாதம் தற்பொழுது இல்லை. இறுதி யுத்தத்தில் ஆயுதமேந்திப் போராடியவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad