புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

வடமராட்சி பாடசாலைகள் உதைபந்தாட்டம் ஆரம்பம்


வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட தொடரின் 15, 17, 19 வயதுக்கு பிரிவுகளுக்கு உட்பட்டோருக்கான
ஆட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகின.
 
15 வயதுப் பிரிவு
நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற 15 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்களில் கொற்றாவத்தை அ.த.க. பாடசாலை- கம்பர்மலை அ.த.க. பாடசாலையை 8:0 என்ற கோல்களாலும், பொலி கண்டி த.க. பாடசாலை தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தை 1:0 என்ற கோல் கணக்கிலும், உடுப்பிட்டி அ.மி. கல்லூரி உடுத்துறை மகாவித்தியாலயத்தை 3:0 என்ற கோல் அடிப்படையிலும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வல்வை சிவகுரு வித்தியாலயத்தை 6:0 என்ற கோல் கணக்கிலும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 
 
17 வயதுப் பரிவு
கரணவாய் கொலின்ஸ் விளையாட் டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற 17 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்க ளில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி- உடுத் துறை மகாவித்தியாலயத்தை 2:0 என்ற கோல் அடிப்படையிலும், அல்வாய் வடக்கு த.க. பாடசாலை பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயத்தை 6:0 என்ற கோல் அடிப்படையிலும், தொண்ட மானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தி யாலயம்- ஆழியவளை வித்தியால யத்தை 4:0 என்ற கோல்கள் அடிப்படையிலும், கொற்றவத்தை அ.த.க. பாடசாலை- புலோலி மெதடிஸ்த மி­ன் பாடசாலையை 7:0 என்ற கோல்கள் அடிப்படையிலும் வென்று அடுத்த சுற் றுக்கு முன்னேறியுள்ளன. 

ad

ad