புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

சபதமிட்டு சதமடித்த ரோகித் சர்மா!


லகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சதமடிக்கப் போவதாக தனது தந்தையிடம்  சபதமிட்டு, அதனை நிறைவேற்றிக் காட்டியதாக ரோகித் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெரியதாக  ஜொலிக்கவில்லை. 6 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் மொத்தமே 159 ரன்களே எடுத்திருந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


காலிறுதியில் ரோகித்தின் அபார ஆட்டம் குறித்து மும்பையில் வசிக்கும் அவரது தந்தை குருநாத் கூறுகையில், ''கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரோகித் என்னிடம் பேசினான். மிகுந்த நம்பிக்கையுடன் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் உங்களையும் இந்த நாட்டு மக்களையும் சந்தோஷத்திற்குள்ளாக்கும் வகையில் விளையாடுவேன் என்றான். அதோடு சதமடிக்கவேண்டும் என்று உறுதி பூண்டிருப்பதாகவும் தெரிவித்தான். லீக் சுற்றுகளில் ரோகித்துக்கு அதிருஷ்டம் இல்லாமல்தான் ரோகித்துக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை'' என்றார். 

இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் தோனி, ரோகித் சர்மாவின் ஆட்டம் பற்றி குறிப்பிடுகையில், ''ரோகித் சர்மாவை மிடில் ஆர்டரின் களமிறக்கி அவரது திறமையை வீணடிக்க விரும்பவில்லை. தொடக்க வீரராக ஆடினால்தான் அவர் மிளிர முடியும்'' என்று தெரிவித்துள்ளார். 

ad

ad