இன்று 26.3.2015 கிளிநொச்சி நீதிமன்றம் வழக்கினை விசாரணை செய்த போது நீதிபதி வகாப்தீன் தாயாருடன் செல்லலாம்
என அனுமதி வழங்கினார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு பாலேந்திரன் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டக்கொண்டதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது. முன்பு அனுமதி கிடைக்காத நிலையில் விபூசிகா தொடர்ந்து மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இதே வேளை பயங்ர வாத தடுப்பு பிரிவினர் வழக்கினை பின் வாங்கியதை அடுத்து இன்று விபூசிகா தாயுடன் செல்ல அனுமதி வழங்க பட்டது.